2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டார் கேர்பர்

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஏழாவது நாளான இன்று, உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான அங்கெலிக் கேர்பர் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் டானியல் கொலின்ஸை எதிர்கொண்ட ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், 0-6, 2-6 என்ற நேர் செட்களில் 56 நிமிடங்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். 

இந்நிலையில், ஐந்து தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஷ்யாவின் மரியா ஷரபோவா தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 6-4, 1-6, 4-6 என்ற செட் கணக்கில் அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 6-0, 6-1, 7-6 (7-4) என்ற நேர் செட் கணக்கில் செக் குடியரசின் தோமஸ் பேர்டிச்சை வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .