2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹலெப்பை வென்று காலிறுதியில் செரீனா

Editorial   / 2019 ஜனவரி 22 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் எட்டாவது நாளான நேற்று, உலகின் முதல்நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப்பை நான்காவது சுற்றுப் போட்டியில் வென்ற 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

றோமானியாவின் ஹலெப்புடனான முதலாவது செட்டை 6-1 என செரீனா இலகுவாகக் கைப்பற்றியபோதும் சுதகாரித்துக்கொண்ட ஹலெப் இரண்டாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். எவ்வாறெனினும் தீர்மானமிக்க மூன்றாவது செட்டை 6-4 எனப் போராடி வென்ற செரீனா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் இலத்தீவியாவின் அனஸ்டிஸஜா செவஸ்டோவாவை எதிர்கொண்ட உலகின் நான்காம்நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸை வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸாவை எதிர்கொண்ட உலகின் ஏழாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், தனது நான்காவது சுற்றுப் போட்டியில் கனடாவின் மிலோஸ் றாவோனிஸை எதிர்கொண்ட உலகின் நான்காம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 1-6, 1-6, 6-7 (5-7) என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, தனது நான்காவது சுற்றுப் போட்டியில் உலகின் ஒன்பதாம்நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, 6-7 (8-10), 4-6, 7-6 (7-4), 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் போராடி ஸ்பெய்னின் பப்லோ கரென்னோ புஸ்டாவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .