2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்னவெம்பு, கிரானைச் சேர்ந்த அ.கிருஷாந் (வயது 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் என கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கும்புறுமூலை - பாசிக்குடா வீதியில், நேற்று (22) மாலை இளைஞன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டோவொன்றுடன் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துத் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .