2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆயுள்வேத வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது

பேரின்பராஜா சபேஷ்   / 2019 மார்ச் 26 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதேசத்தில், மாவட்ட தரத்தில் இயங்கிவந்த ஆயுள்வேத வைத்தியசாலை, ஆதார தர வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.

 

இவ்வைத்தியசாலையைத் தரமுயர்த்துவது தொடர்பாக நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவ்வைத்தியசாலையில்  தற்போது நிலவும் குறைபாடுகள் குறித்த மகஜரும்   ஆளுநரிடம் இதில் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .