2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒரு தொகை கைக்குண்டுகள் மீட்பு

வா.கிருஸ்ணா   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில், ஒரு தொகை கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் இன்று (18)பிற்பகல் மீட்டுள்ளனர்.

களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பாவற்கொடிச்சேனை பகுதியில் கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.

தகரப் பேணி ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் 18 கைக்குண்டுகள் இவ்வாறு மீட்டக்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.எம்.பி.ஜெயகளும் தெரிவித்தார்.

முன்னர் விடுதலைப்புலிகளின் முகாமாக இருந்து கைவிடப்பட்ட காணியொன்றிலேயே இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு விசேட அதிரடிப்படையின் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லத்தீப்பின் பணிப்புரையின் கீழும், கிழக்கு மாகாண விசேட அதிரடிப்படையின் வலய கமாண்டர் எம்.பி.ஜி.ரத்பிட்டியவின் வழிகாட்டலில் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் நிலையிலேயே இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவினைப்பெற்று நாளை(19)குறித்த கைக்குண்டுகள் செயழிலக்கச்செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .