2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கைதிகள் விவகாரத்தில் த.தே.கூ மீது பொதுமக்கள் சந்தேகம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 20 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனும் அவரது சகாக்களும் விதண்டாவாதம் பேசிகின்றார்களா எனப் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுகின்றது என, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும், மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவிப்பு.

அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக நேற்று (19) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

“மஹிந்த ஆட்சிக் காலத்தில், 12,000 விடுதலைப் புலிப் போராளிகளை விடமுடியும் என்றால், தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியால் ஏன் விடுதலை செய்ய முடியவில்லையென, வட, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் பாரியதொரு சந்தேகம் நிலவுகின்றது.

“சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் காப்பாற்றப்படும் நல்லாட்சி அரசாங்கத்தால் இதுவரையும் விடுதலை செய்யவில்லை.

“தமிழ் அரசியல்கைதிகளின் நிலைப்பாட்டில், ஜனாதிபதி தூரநோக்குச் சிந்தனையுடன் செயற்பட்டும் பொதுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் மிக விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும்.

“தற்போது சிறையிலுள்ள 154 அரசியல் கைதிகளை ஏன் ஜனாதிபதியால் விடுதலை செய்ய முடியவில்லை. இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு  முட்டுக்கொடுத்தும், தமிழ் அரசியல்கைதி விடயத்திலும் கவனமில்லாமல் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் முனைப்புடன் செயற்படவில்லை என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கேள்வியும் எதிர்பார்ப்பாகும்.

“எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருக்கும்  மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கும், தமிழ் மக்களின் வாக்குகளை சுவீகரிப்பதற்காகவும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்காக வைத்திருக்கின்றார்களோ என்று தமிழ் மக்கள் புலம்புகின்றார்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .