2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கொள்ளைகள் தொடர்பில் எண்மர் கைது

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பாளையம் பிரதேசத்தில் இரு வீடுகள் உடைக்கப்பட்டுக் கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், 8 பேர், நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், 2 இலட்சம் ரூபாய் பணம், 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 31 பவுண் நகைகள், டிஜிட்டல் கமெராக்கள் 2, தொலைபேசிகள் 8 உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளனவென, களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன தெரிவித்தார்.

கடந்த 22ஆம் திகதி இரவு, செட்டிப்பாளையத்திலிருந்த இரு வீடுகள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம், நகைகள் உட்பட இலத்திரனியல் உபகரணங்களும் கொள்ளையிடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக விசாரணை​களை முன்னெடுத்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார், பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்களை, அக்கரைப்பற்று, தம்பட்டை பிரதேசத்தில் வைத்து நேற்று  கைதுசெய்தனர்.

அத்துடன், அவர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்த 4 வர்த்தகர்களையும் கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து 31 பவுண் தங்க நகைகளையும், வாடகைக்குப் பெறப்பட்ட நவீன காரொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .