2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சகதியில் சிக்கி புலனாய்வு அதிகாரி மரணம்

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான், கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரியும் அதிகாரியொருவர், பொழுது போக்குக்காகக் பாலமுனையிலுள்ள குட்டையொன்றில் இறங்கி வலைகளைக் கட்டி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தக் குட்டையில் சேற்றிலும் சகதியிலும் சிக்கி உயிரிழந்துள்ளாரென, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காத்தான்குடி- 06ஐ சேர்ந்த ஏ. றம்ழான் முஹம்மது றியாஸ் (வயது - 34) என்பவரே நேற்று (22) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .