2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்வதேச கூட்டுறவு தின விழா மட்டக்களப்பில்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 23 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான, சர்வதேச கூட்டுறவு தின விழா, மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில், எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ளதென, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சி.எம்.சரீப் தெரிவித்தார்.

இந்த விழாவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியாலும் அவரின் வழிகாட்டலிலும், சர்வதேச கூட்டுறவு தின விழா, இவ்விழா நடைபெறவுள்ளது.

இந்த விழா தொடர்பாக ஆராயும் ஆரம்பக் கூட்டம், அமைச்சின் செயலாளர் ஜே.எம்.எஸ்.ஜெயசிங்க தலைமையில், மட்டக்களப்பில் நேற்று  (22) நடைபெற்றது.

இந்த விழாவில், கிழக்கு மாகாணத்திலிருந்து 3,000 கூட்டுறவாளர்களும், ஏனைய மாகாணங்களில் இருந்து 2,000 கூட்டுறவாளர்களுமாக 5,000 கூட்டுறவாளர்களைக் கலந்துகொள்ளச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் சிறந்த கூட்டுறவுச் சங்கங்கள், கிராமிய கூட்டுறவு அபிவிருத்தி வங்கிகள், கூட்டுறவு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், நுகர்வோர் பிரிவைத் தெரிவு செய்தல், கூட்டுறவு அழகன், கூட்டுறவு அழகி, கூட்டுறவு நட்சத்திர பாடகர் போன்றோரைத் தெரிவுசெய்வதற்கான போட்டிகளையும் நடத்துவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .