2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

டெங்குக் காய்ச்சலால் 4,751 பேர் பாதிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,751 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக, மட்டக்களப்புப்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸ் நவரட்ணராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட டெங்குப் பாதிப்பு நிலைமை தொடர்பாக மேலும் விவரம் தெரிவித்த அவர்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு அபாயம் குறித்து பரவலான, தொடர்ச்சியான விழிப்புணர்வுகள் பல மட்டங்களிலும் இடம்பெற்றுவருகின்றன எனத் தெரிவித்தார்.

அதேபோன்று 2019ஆம் ஆண்டிலும் டெங்கு அபாயம் குறித்த விழிப்புணர்வுகள் பல மட்டங்களிலும் இடம்பெறும் வகையில் நிகழ்ச்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .