2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

த.தே.கூ, பேரினவாதக் கட்சிகளுக்கு ‘சார்பாக நடந்ததில்லை’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 நவம்பர் 28 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாம் எந்தப் பேரினவாதக் கட்சிகளுக்கும் சார்பாக ஒரு காலமும் நடந்ததில்லை, நடக்கப்போவதுமில்லை என, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கூட்டமைப்பு, ஐ.தே.கவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், மட்டக்களப்பில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது இரு அணிகள் செயற்பட்டு வருவதாகவும் ஒன்று ஜனநாயகத்தை மீறிச் செயற்படும் அணியென்றும் மற்றையது ஜனநாயகத்தை சீர்செய்ய வேண்டும் என்று செயற்படுகின்ற அணியென்றும் தெரிவித்தார்.

இவற்றில், ஜனநாயகத்தை சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கில், மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன செயற்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

“இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பாக நிற்கின்றது என்று யாரும் சொல்லாமல், ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக இருக்கின்றது என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படப் போவதில்லையென, மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகச் கூறியிருக்கின்றது. அதே நிலைப்பாட்டிலேயே, கூட்டமைப்பும் காணப்படுகிறது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லுகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இதனை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அவர், தாம் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்பது தொடர்பான அணியில் ஓர் அங்கமாக இருக்கின்றோமே தவிர, ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக இல்லையெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .