2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

படுகொலை செய்யப்பட்ட கான்ஸ்டபிள்களுக்கு பதவியுயர்வு

Editorial   / 2018 டிசெம்பர் 01 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் பொலிஸ் சார்ஜன்ட் ஆக பதவி உயர்வு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர ஆகியோர், நேற்றிரவு (30) மட்டக்களப்புச் சென்றிருந்தனர்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று மட்டக்களப்புக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .