2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிள்ளையான் மீதான குற்றச்சாட்டை நீக்குமாறு கையெழுத்துப் பேராட்டம்

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன, ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் குற்றச்சாட்டை நீக்குமாறு கோரி, மட்டக்களப்பு நகரில், இன்று(18) காலை முதல் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு, காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்ற இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில், மட்டக்களப்பு மாநகர சபை, மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையெழுத்திடனர்.

2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனையின் போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, பிள்ளையான் என அழைக்கப்படும் சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்குக் குறித்த விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இர்ஸதீன் முன்னிலையில் இன்று (18) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்திரகாந்தன் உட்பட ஐவரின் விளக்கமறியல், எதிர்வரும் 30.08.2018 வரை நீடிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .