2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெண்ணொருவரைத் தாக்கிவிட்டு தங்க நகைகள் கொள்ளை

Editorial   / 2019 மே 19 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

மட்டக்களப்பு காத்தான்குடி, ஆறாம் குறிச்சியிலுள்ள வீடொன்றுக்குள், முகமூடி அணிந்த நிலையில்,  இன்று (19) காலை புகுந்த நபரொருவர், அவ்வீட்டிலிருந்த பெண்ணைத் தாக்கவிட்டு,  தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகக் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளான பெண், காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றும் இதுத் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .