2024 மே 02, வியாழக்கிழமை

‘மட்டக்களப்பில்டெங்கு ஒழிப்பு வெற்றி’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெற்றி கண்டுள்ளதாக, மாநகர சபை ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு, திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் நகரத் தூய்மையாக்கல் பற்றி இன்று (19) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்ததாவது, 

கடந்த வருடமும் இவ்வருடத்தின் ஆரம்பித்திலும் மட்டக்களப்பில் இருந்து வந்த டெங்கு அச்சுறுத்தல், சுகாதாரத் திணைக்களம் மற்றும் மாநகர சபை ஆகியவற்றின் கூட்டிணைந்த முயற்சியோடும் பொதுமக்களின் ஒத்துழைப்போடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை, தெருக்களிலும், வாவி, வடிகான்கள் போன்ற  கண்ட கண்ட இடங்களில் மக்கள் கழிவுகளைக் கொட்டுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக, மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் தொடங்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையுள்ள நகரின் முக்கிய தெருவான கோவிந்தன் வீதி முழுக்க காலை வேளையில் குப்பைத் தொட்டியாக காட்சியளிக்கும் நிலை காணப்படுகின்றது.

இந்த வீதியில் நகர பிரதான பாடசாலைகள், வங்கிகள், சிறைச்சாலை, தேவாலயம், கோயில், பல்வேறு நிறுவனங்கள் என்பன உண்டு. மக்கள் பரபரப்பாக போக்குவரத்துச் செய்யும் இந்தத் தெருவை சுத்தமாக வைத்திருப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புத்தர வேண்டும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் நோயாளிகளும் நோயாளர்களது உறவினர்களும் பொலித்தின் பைகளில் கழிவுகளைக் கட்டி வீதியோரத்திலும் கான்களுக்குள்ளும் வீசுவிட்டுச் செல்கின்றனர்.

இது நகர அசுத்தத்துக்கும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதற்குத் தோதாகவும் அமைந்து விடுகின்றது.

எனவே, இந்த விடயத்தில் நாளாந்தம் மட்டக்களப்பு நகர குடியிருப்பாளர்களும், நாளாந்தம் அலுவல்களுக்காக நருக்கு வரும் பொதுமக்களும் அக்கறை எடுக்க வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .