2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு நகரில், டெங்குத் தடுப்பு துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகளாலும் உத்தியோகத்தர்களாலும், மட்டக்களப்பு நகரில், டெங்குத் தடுப்பு துண்டுப்பிரசுரங்கள், இன்று (02) விநியோகிக்கப்பட்டன.

பிரதான பஸ் நிலையம், பொதுச் சந்தை, ரயில் நிலையம், காந்திப் பூங்கா, பொலிஸ் சுற்றுவட்டம், அரசடிச் சந்தி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோகம் செய்யப்பட்டன.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம், செப்டெம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதி (இன்று) வரை நாடெங்கிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், கடந்த 26ஆம் திகதி முதல் பல்வேறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .