2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘மட்டக்களப்பு மாவட்டத்தில் 8,605 திட்டங்கள் முன்னெடுப்பு’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், இவ்வருடம் 8,605 திட்டங்களுக்காக 6505.78 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளதெனவும், அவற்றில் 4,180 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளனவெனவும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) நடைபெற்றபோது, உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் தலைமையில், இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த வருடத்தில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும், இவ்வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும், இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், அத்திட்டங்களில் முடிவடையாத திட்டங்கள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த மாவட்ட செயலாளர், தொடர்ந்தும் ஒத்துழைப்பை அனைவரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .