2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மரம் விழுந்து வாகனங்கள், கடைகள் சேதம்

வி.சுகிர்தகுமார்   / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியின் பிஸ்கால் சந்திக்கு அருகில் இருந்த பாரிய மரமொன்று, இன்று(16) நண்பகல் சரிந்து வீழ்ந்ததில், மூன்று வாகனங்கள் உட்பட சில கடைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் இப்பகுதியில், பல மணிநேரம் வீதி போக்குவரத்துகள் தடைப்பட்டன. ஆனால் உயிராபத்துகள் ஏதும் நிகழவில்லை.

இவ்விடயம் ​தொடர்பில், முன்கூட்டியே மக்கள் உரியவர்களின் கவனத்துக்குக் கடிதம் மூலம் அறிவித்திருந்தபோதிலும், அரச அதிகாரிகளின் அசண்டையீனம் காரணமாக, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த மரத்தை அகற்றுவதற்கான பணிகளை மாநகர சபை மற்றும் மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .