2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாகாண பணிப்பாளர்களில் ஒருவராக கபூர்தீன் நியமனம்

Editorial   / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 றியாஸ் ஆதம், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எஸ்.ஏ.கபூர்தீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனக் கடிதம், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தற்போதைய தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். சுபைரால் இன்று (29) வழங்கிவைக்கப்பட்டது.

புதிய உறுப்பினர் எம்.எஸ்.ஏ. கபூர், மக்கள் வங்கியில் 39 வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்றவராவார். .

‪கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக ஏழு பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .