2024 மே 11, சனிக்கிழமை

முன்னாள் போராளியின் சடலம் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் போராளியொருவரின் சடலம், நேற்று (05)  அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஐந்து பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய வைரமுத்து திசவீரசிங்கம் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் போது, இவரது சரீரத்தில் உள்நுழைந்த ஆயுதப் பொருட்களின் துகள்கள், தொடர்ந்து அகற்றப்படாமல் இருந்தமையால், இவர் அடிக்கடி வலிப்பு உபாதைக்கு உள்ளாகி வந்ததாகவும் இதனால் பெருமளவில் விரக்திக்கு உள்ளாகியிருந்த இவர், ஏற்கெனவே தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டிருந்தார் என்றும், பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .