2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

றெதிதென்ன கிராமத்தில் வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மார்ச் 07 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, றெதிதென்ன கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல், நேற்று (06) நாட்டி வைக்கப்பட்டது.

புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால், கட்டார் நாட்டின் கட்டார் ரெட்கிறசண்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன், இந்த வீடுகள் நிர்மானிக்கப்படவுள்ளன.

இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ், 56 வீடுகள் மற்றும் பாடசாலை பள்ளிவாசல், பொதுக் கட்டடம் என்பனவும் நிர்மானிக்கப்படவுள்ளன.

இந்த வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் உட்பட கட்டார் ரெட்கிறசண்ட் பிரதி நிதிகள், பிரமுகர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .