2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வீதி மருங்கில் வீசப்பட்ட பெண் சிசு பொலிஸாரால் மீட்பு

Editorial   / 2019 ஜனவரி 21 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஆர்.ஜெயஸ்ரீராம்

வீதி மருங்கில் அநாதரவாக வீசப்பட்டுக் கிடந்த இரண்டரை மாத வயதுடைய பெண் சிசுவொன்றை மீட்டெடுத்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து, கிரான் முருகன் கோவில் வீதிக்குச் சென்றபோது அங்கு வீசப்பட்டுக் கிடந்த சிசுவைத் தாம் மீட்டெடுத்து உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்றிரவு (20) 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இச்சிசு வீசப்பட்டிருக்கலாம் என விசாரணைகளின்போது பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .