2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

2,100 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

Editorial   / 2018 மே 23 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

பூண்டுலோயா பிரதேசத்தில் வைத்து கழிவுத் தேயிலையுடன் ஒருவரை, நேற்று (23) கைதுசெய்துள்ள தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர், 2,100 கிலோகிராம் கழிவுத் தேயிலையையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கழிவுத் தேயிலையைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படுத்திய லொறியையும், அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கம்பளையில் இருந்து பூண்டுலோயா பகுதியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலைக்கு தேயிலைத்தூளைக் கொண்டு சென்ற லொறியை, இடையில் வழிமறித்துச் சோதனை செய்தபோது, கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி தேயிலைத் தூள் கொண்டு செல்லப்பட்டதெனவும், பொதிசெய்யப்பட்டிருந்த நிலையிலேயே, கழிவுத் தேயிலைக் கைப்பற்றப்பட்டதெனவும், விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பூண்டுலோயா பொலிஸில் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .