2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘உமா’-ஐ ஆராய உப-குழு

Editorial   / 2017 ஜூன் 29 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டம் காரணமாக, பதுளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தேடியறிந்து, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, அமைச்சரவை உப-குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, சம்பிக்க ரணவக்க, விஜித் விஜயமுனி சொய்ஸா ஆகியோரைக் கொண்ட உப-குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளது.  

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவரான, அமைச்சர் தயாசிறி ஜயசேகரவே மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .