2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுத்தையின் சடலம் மீட்பு

Editorial   / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

திம்புள்ள பத்தனை பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டத்தில், சுமார் ஐந்து அடி நீளமான சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (16) அதிகாலையிலேயே, இந்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டுத்தோட்டத்தில், பன்றியொன்றுக்குப் போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கியே, இந்தச் சிறுத்தை உயிரிழந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்டோனிகிளிப் தோட்டத்தில், மிக நீண்டகாலமாக, சிறுத்தைகளின் நடமாட்டம் இருந்து வருகின்றது. தற்போது, வீடுகளுக்கு அருகிலும் இந்தச் சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில், தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்களும், சிறுத்தைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தனர்.

மீட்கப்பட்டுள்ள சிறுத்தையின் சடலம், நல்லதண்ணி வனஜிவராசி திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என, திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .