2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிவனொளிபாத மலைக்குச் சென்ற 10 பேர் சிக்கினர்

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

சிவனொளி பாதமலையை தரிசிப்பதற்காகச் சென்ற 10 பேரிடமிருந்து, ஒரு தொகை கஞ்சா பக்கெட்டுகள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகளை, ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேற்படி 10 பேரையும் கைதுசெய்துள்ளனர்.

“கோரா”என்றழைக்கப்படும் மோப்ப நாயின் உதவியுடனேயே, மேற்படி 10 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் காலி பிரதேசங்களிலிருந்து சிவனொளி பாதமலையை தரிசிப்பதற்காகச் சென்றவர்களிடமிருந்தே, மேற்படி கஞ்சா பக்கெட்டுகளும், சிகரெட் பக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேனை தியகல பகுதியில் பயணித்த பதினைந்து வாகனங்களை, ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர், சனிக்கிழமை மாலை சோதனைச் செய்தனர்.

இதன்போது, வெவ்வேறு  வாகனங்களில் பயணித்த ஒன்பது பேரிடமிருந்து, 10 கிராம் 1000 மில்லிகிராம் கஞ்சா பக்கெட்டுகளும் ஒருவரிடமிருந்து இரண்டு சிகரெட் பக்கெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .