2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்தத் தீர்மானம்

Kogilavani   / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், டி.ஷங்கீதன், டி.சந்ரூ

“நுவரெலியா மாவட்டத்தில், சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த நாம் உத்தேசித்துள்ளோம்” என்று, நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு இரண்டாம் கட்டமாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை, வியாழக்கிழமை (21) மதியம் 12 மணியுடன் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில் நிறைவடைந்தது” என்றும் அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது மேலும் கூறுகையில்,

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இதன்போது 69 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நுவரெலிய பிரதேச சபைக்காக 7 வேட்பு மனுக்களும் ஹட்டன் டிக்கோயா நகர சபைக்காக 6 வேட்பு மனுக்களும், அம்பகமுவ பிரதேச சபைக்காக 9 வேட்பு மனுக்களும், நோர்வூட் பிரேச சபைக்காக 7 வேட்பு மனுக்களும், கொட்டகலை பிரதேச சபைக்கு 10 வேட்பு மனுக்களும், அங்குராங்கெத்த பிரதேச சபைக்கு 5 வேட்பு மனுக்களும், வலப்பனை பிரதேச சபைக்கு 7 வேட்பு மனுக்களும், கொத்மலை பிரதேச சபைக்கு 5 வேட்பு மனுக்களும், மஸ்கெலிய பிரதேச சபைக்கு 6 வேட்பு மனுக்களும், அக்ரபத்தனை பிரதேச சபைக்கு 7 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

“இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 69 வேட்பு மனுக்களில் ஒரு வேட்பு மனு மாத்தரம் நிராகரிக்கப்பட்டது. நுவரெலிய பிரதேச சபைக்காக லங்கா சமசமாஜ கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் மாத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளன.

“அதாவது வேட்பாளரின் பிழையால் முழு வேட்பு மனுபத்திரமும் இந்தமுறை தேர்தலில் நிராகரிக்கப்படுவதில்லை என்பது முக்கிய விடயம். அதற்கமைய ஹட்டன் - டிக்கோயா நகர சபைக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு வேட்பாளரினதும், அம்பகமுவ பிரதேச சபைக்காக அது கட்சியின் சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஒருவரின் பெயரும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

“அதேபால் நோர்வூட் பிரதேச சபைக்காக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் பெயரும்  அதுபோல் கொட்டகலை பிரதேச சபைக்காக ஐக்கிய மகா ஜன கட்சி சார்பில் வேட்பு மனுவை தாக்கல் செய்த ஒருவரின் பெயரும், அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் பெயரும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

“அதேபோன்று, வலப்பனை பிரதேச சபைக்காக ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேட்பாளர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணி சார்பில் வலப்பனை பிரதேச சபைக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் ஒருவரின் பெயரும் நிராகரிக்கப்பட்டன. அதுபோல், 15 வேட்பு மனுக்கள் தொடர்பில் பல கட்சிகள் 15 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளன. இதற்கமைய சுதந்திரமானதும், நீதியனதுமான தேர்தலை நடத்த நாம் உத்தேசித்துள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .