2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நோயாளி மீது தாக்குதல்; ஒருவர் கைது

Editorial   / 2019 மார்ச் 08 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, டி.கௌசல்யா

லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர், வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த நபரொருவரால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி நபர் வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி சென்று, வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆண் நோயாளி ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளாரென்று தெரியவருகிறது.  

இதனையடுத்து வைத்தியசாலை தரப்பினர் லிந்துலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து, நோயாளியைத் தாக்கிய நபர் பொலிஸாரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .