2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பதுளையில் யானையில் களமிரங்கும் மு.கா

Editorial   / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாஹீர் பாயிஸ் 

பதுளை  மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ.தே.காவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக, பதுளை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் தாஜுதீன் தெரிவித்தார்.

பதுளையில் நேற்று, பசறை தேர்தல் தொகுதிக்கான வேட்புமானுத்தாக்கல் இடம்பெற்றதையடுத்து, ஊடங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பசறை தேர்தல் தொகுதியின் ஐ.தே.கா அமைப்பாளரும் நாடாளுமன்ற  உறுப்பினாருமான வடிவேல் சுரேஸ், பசறை நகர பிரதேசத்துக்கு முஸ்லிம் அபேட்சகர் ஒருவர் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக, ஸ்ரீ லாங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு போனஸ் ஆசனம் ஒன்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளமையை அடுத்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பசறை தொகுதிக்கு வேட்புமனுதாக்கல் செய்வதை வாபஸ் பெற்றுக் கொண்டது.

பசறை தேர்தல் தொகுதிக்கு, முஸ்லிம் காங்கிரஸ்  அமைப்பாளர் மொஹொமட் முனவ்வர் ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பசறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் காதர் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு போனஸ் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .