2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

புதையல் தோண்டுவதற்கு முயற்சி; ஐவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, திப்போடுமுனாவ பிரதேசத்தில், புதையல் தோண்ட முற்பற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஐவரை, பொலிஸார் இன்று (11) கைதுசெய்துள்ளனர்.

புதையல் தோண்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த போதே, குறித்த ஐவரும் பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை, ரிதியகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42,62,32,51,22 ஆகிய வயதுடைய ஐவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி ஐவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .