2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெரிய நாகவத்தை தொழிலாளர்கள் டயர் எரித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்,  கு.புஷ்பராஜ்

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தி, தொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று (7) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தைத் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், தோட்டத்திலுள்ள பாடசாலைக்கு முன்பாக, பட்டாசுக் கொளுத்தி, டயர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள உயர்வுக் கோரிக்கை என்பது பொதுவான கோரிக்கையென்றும் இதற்குத் தீர்வு காண தொழிலாளர்களிடம் சந்தா வாங்கும் தொழிற்சங்கங்கள் ஒருமித்தக் குலையும், அழுத்தத்தையும் கம்பனிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .