2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மாத்தளையில் 15 முறைப்பாடுகள்

Editorial   / 2019 ஒக்டோபர் 18 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மாத்தளை மாவட்டத்தில்,  15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென, மாத்தளை மாவட்ட மேலதிகச் செயலாளர்  இஷான் விஜயதிலக தெரிவித்தார்.

இதில் 10 முறைப்பாடுகள் எவ்வித அடிப்படையுமின்றி செய்யப்பட்ட ​பொய்யான முறைப்பாடுகள் என்றும் இந்த முறைப்பாடுகள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து விசாரணை செய்யும் போதே, இந்த விடயங்கள் குறித்து தெரியவந்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய 5 முறைப்பாடுகள் தொடர்பில், ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, கூட்டங்கள், பொருள்கள் விநியோகம் தொடர்பான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதென மேலதிகச் செயலாளர் இஷான் விஜயதிலக மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .