2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஸ்கெலியா வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், செ.தி.பெருமாள், எஸ்.சதிஸ், ரஞ்சித் ராஜபக்ஷ

மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால், 300க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன் காரணமாக மேற்படி வைத்தியசாலைக்கு வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரியும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரியும் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மக்களும் மஸ்கெலியா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் வைத்தியசாலைக்கு முன்பாக, நேற்று (19) காலை சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .