2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஹியங்கனையில் 75 பேருக்கு தொற்று உறுதி

Gavitha   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மஹியங்கனையில், 2 ஆடைத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த 75 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹியாங்கனையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 324 பேருக்கு, கடந்த 29ஆம் திகதி, பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அவற்றின் முடிவுகளில், 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன்னர், 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, மற்றைய தொழிற்சாலையில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, இரு தொழிற் சாலைகளிலும் இதுவரை 75 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இந்தத் தொழிற்சாலையில், 2,500க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .