Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Editorial / 2019 ஜூன் 14 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன்- டிக்கோயா தரவாளை விளையாட்டு மைதானத்தில், கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்வத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட அறுவரை, விளக்கமறியலில் வைக்குமாறும் மேலும் ஐந்து சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிக்குமாறும் ஹட்டன் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
ஹட்டன்- டிக்கோயா தரவாளை விளையாட்டு மைதானத்தில், கடந்த 9ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த மென்பந்து கிரிகட் சுற்றுபோட்டியின் போது, இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் கண்டி வைத்தியசாலையிலும் இருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அறுவரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய ஐந்து சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் எதிர்வரும் 27ஆம் திகதி வரை வைக்குமாறும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராமன் ட்ரெஸ்க்கி உத்தரவுப் பிறப்பித்துள்ளார்
சீசீடிவியின் உதவியுடன் மோதலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்து, நேற்று முன்தினம் (12) நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
2 hours ago