2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் நபர் பலி

Kogilavani   / 2018 ஜனவரி 24 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை -குருநாகல் வீதி, சமன்புர பிரதேத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபர் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர், பாதையைக் கடக்க முயன்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .