2024 மே 02, வியாழக்கிழமை

விபத்தில் நால்வர் படுகாயம்

Yuganthini   / 2017 ஜூன் 22 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சுஜிதா

தலாவாக்கலையிலிருந்து, லிந்துலை பேர்ஹாம் தோட்டத்துக்குச் சென்ற முச்சக்கர வண்டி, தலவாக்கலை – டயகம பிரதான வீதி, லிந்துலை வைத்தியசாலைக்கு அருகில், 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நால்வரும் படுகாயமடைந்த நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று  இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், பேர்ஹம் தோட்டத்தைச் சேர்ந்த நால்வரே, படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .