2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வேவர்லி தோட்ட மக்களின் போராட்டம்; ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்ற திலகர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனை, வேவர்லி தோட்டத் தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு உள்ளதாக நுவரலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை ஜனாதிபதியின் நாடாளுமன்ற அலுவலகம் ஊடாக அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தி உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டுமெனவும் திலகர் எம்.பி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .