2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹெரொய்ன் வைத்திருந்த ஐவர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

சித்திரைப் புத்தாண்டு தினத்தில், ஹெரொய்ன் வைத்திருந்த ஐந்து சந்தேக நபர்களை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில், இச்சந்தேக நபர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, 1,426 மில்லிகிராம் ஹெரொய்னை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும், கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்யவுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .