2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆண்கள் இருவரது சடலங்கள் மீட்பு

Editorial   / 2017 ஜூன் 19 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையின், வெவ்வேறு பகுதிகளில், ஆண்கள் இருவரது சடலங்களை, நேற்று மீட்டுள்ளதாக, பெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

கடுவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய நபரின் சடலம், பெலியகொட – பியகம வீதிக்கு அருகில் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடவத்த பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய இளைஞனின் சடலம், ரணவீரு மாவத்தை அருகே ஆற்றில் மிதந்த நிலையில், பெலியகொட பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலங்களை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .