2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் நால்வர் கைது

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பருத்தித்துறை கடற்பரப்பை அண்மித்த இலங்கைக் கடற்பரப்பினுள் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் நால்வரை, கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் வலாக்கொலகே தெரிவித்தார்.

பருத்தித்துறைக்கு வட கிழக்கே 18 கடல்மைல் தொலைவில் நேற்று (13) இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளாக, வலாக்கொலகே மேலும் தெரிவித்தார்.

கைதான மீனவர்கள், யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .