2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘எனக்கு வேகம் மட்டும் இல்லை’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 ஜூன் 04 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம்பெற்று வருவதோடு, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்ஸீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதாக” அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச, அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை(4) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

“எனக்கு வேகம் மட்டும் இல்லை. விவேகமும் இருக்கின்றது.

கண்மூடித்தனமான வேகமாக மட்டும் இருந்தால் அது ஒரு விபத்தை ஏற்படுத்தி நானும் அழிந்து என் சார்ந்தவர்களையும் அழித்து விடும்.

எனவே வேகமாக மட்டுமல்ல விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .