2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எல்லைத் தாண்டிய இந்திய மீனவர்கள் கைது

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

 

எல்லைதாண்டி மீன் பிடித்தக் குற்றச்சாட்டில், நான்கு இந்திய மீனவர்களை, காரைநகர் கடற்படையினர், நேற்று   (21) இரவு கைது செய்துள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

கைதான நால்வரும், தமிழ்நாடு - இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து. மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களுக்கு எதிராக, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .