2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஓராண்டு நிறைவில் போராட்டத்துக்கு அழைப்பு

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் ஓராண்டாகியுள்ள நிலையில், நாளை (15) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்துக்கு, கட்சி பேதமின்றி அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களை ஆதரவு வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .