2024 மே 08, புதன்கிழமை

‘குற்றம்புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் என நிருபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி கூறியது போன்று குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் இராகவன் இலங்கை அரசாங்கம் தன்னால் செய்யக் கூடிய நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது முன்னெடுக்க வேண்டுமென்றும் தமிழ் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா செல்வதற்கு முன்பாக தமிழ் மக்கள் தன்னிடம் முன்வைத்த அரசாங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும், குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டும், காணாமற்போனோர் தொடர்பில் தேடுதலை மேற்கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஜெனிவாவில் கொண்டு சென்று கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X