2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தையிட்டியில் வெடிபொருட்கள் மீட்பு

செல்வநாயகம் கபிலன்   / 2017 செப்டெம்பர் 25 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் விடுவிக்கப்பட்ட, யாழ். தையிட்டி கிழக்கு பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் நேற்று  (25) மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு உரிமையாளர், விடுவிக்கப்பட்டிருந்த தனது கிணற்றை இறைத்து துப்பரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மேற்படி வெடிபொருட்கள் தென்பட்டுள்ளன. இது தொடர்பில் அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸார் வெடி பொருட்களை மீட்டனர்.

துப்பாக்கி ரவைகள், வெடிபொருள் அடங்கிய 70 பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் உதவியுடன் வெடிபொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .