2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நினைவுதினம் அனுஷ்டிப்பு

Editorial   / 2020 ஜூன் 01 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 39ஆவது ஆண்டு நினைவுதினம், யாழ் நூலகத்தில், இன்று (01) அனுஷ்டிக்கப்பட்டது.

அத்துடன், பொது நூலகம் எரிக்கப்பட்டபோது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு, யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஏற்பாட்டில், பதில் மேயர் தலைமையில், நூலக வளாகத்தில், அஞ்சலியும் செய்யப்பட்டது.

மேலும், நூலக எரிக்கப்படட நினைவு நாள் நிகழ்வு, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலும் நூலக நுழைவாயிலில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .