2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிமருந்து மீட்பு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 02 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திலிருந்து ஒரு தொகை வெடிமருந்தை யாழ்.பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீட்டுள்ளனர்.

கொழும்புத்துறை பகுதியில் உள்ள சிறுவர் நீதிமன்றுக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் வெடி பொருட்கள் காணப்படுவதாக அதிரடி படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலின் பிரகாரம் நேற்று (01)இரவு குறித்த பகுதிக்கு சென்ற அதிரடி படையினர் அங்கிருந்து 1 கிலோ கிராம் நிறையுடைய சி 4 ரக 7 வெடிமருந்து பொதிகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட வெடிபொருட்களை அதிரடி படையினர் யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெடிமருந்து, டைனமெட் போன்ற வெடிபொருட்களை தயாரித்து மீன்பிடிக்காக பயன்படுத்தும் நோக்குடன் அங்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை குறித்த பஸ் நிலையத்தில் 4 கிலோ கிராமுடைய ரி.என்.ரி. ரக வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்.பொலிஸ் விசேட அதிரடி படையினர் மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .