2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“புதிய சுதந்திரன்’’ வெளியீடு

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்" பத்திரிகை இன்று (14) வெளியிட்டு வைக்கப்பட்டது.

நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாகிய சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் எம்.அகிலனிடமிருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பத்திரிகையின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்குப் பிரதிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் உலகத் தமிழர் பேரவையின் தவைவர் இம்மானுவல் அடிகளார், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா மற்றும் இந்து, இஸ்லாமிய மதகுருமார், மாகாண சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .