2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

Leesons ஹொஸ்பிட்டலில் உயர்தர இருதய 640 slice CT scanner

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

Leesons தனியார் வைத்தியசாலை, உலகின் நவீன அம்சங்களைக் கொண்ட, 640 slice CT scanning system ஐ நிறுவியுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையில் நோய் இனங்காணல் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் புதிய இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.   

மருத்துவத்துறைக்கு இயந்திரங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நன்மதிப்பைப் பெற்ற சேவை வழங்குநரான Mediquipment இனால் நிறுவப்பட்டுள்ள புதிய Toshiba Aquilion ONE ViSION EDITION - CT ஸ்கானர், உலகில் காணப்படும் நவீன அம்சங்களுடன் திறன் வாய்ந்த CT ஸ்கானராகத் திகழ்கிறது.

இருதயத்தின் ஒரு துடிப்பை வேகமாக ஸ்கான் செய்யும் ஆற்றல் படைத்த இந்த இயந்திரம், நோயாளர்களுக்குக் குறைந்த கதிரியக்கங்களை வெளிப்படுத்தி, அதிகளவு திறன் வாய்ந்த பரிசோதனைகளை மேற்கொள்கிறது.  

Aquilion ONE ViSION EDITION ஜப்பானின் Toshiba Medical Systems Corporation உற்பத்தி செய்கிறது. தற்போது இந்நிறுவனம் Canon குழுமத்தின் துணை நிறுவனமாக அமைந்துள்ளது. 

மருத்துவத்துறையில் Canonஇன் பிரசன்னத்தை மேம்படுத்தும் வகையில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற உயர்தரம் வாய்ந்த Ultrasound, CT, MRI மற்றும் X-Ray கட்டமைப்புகளை உற்பத்தி செய்யும் Toshiba வின் இந்த இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.   

Leesons வைத்தியசாலை முகாமைத்துவ பணிப்பாளர் சமன் கிரிஷாந்த கருத்துத் தெரிவிக்கையில், “எமது நோய் பரிசோதனைப் பிரிவில், குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தலை அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம். நவீன அம்சங்களைக் கொண்ட, உயர் திறன் வாய்ந்த Toshiba Aquilion ONE ViSION EDITION ஐ Leesons வைத்தியசாலையில் நிறுவியுள்ளோம். வழமை போன்று, நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் சௌகரியம் ஆகியன எமது முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளன. இந்த இயந்திரத்தினூடாக, நெஞ்சறை x-rayஇன் போது ஆகக்குறைந்த x-ray கதிரியக்கம் 0.26 mSv வெளிப்படுவதை எம்மால் உறுதி செய்ய முடியும். அல்லது விமானமொன்றில் நாம் பயணிக்கும் போது, எதிர்கொள்ளும் கதிரியக்க மட்ட அளவுக்கு நிகரானதாக இது அமைந்துள்ளது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .